செய்திகள்
விஜய சங்கர்

சையத் முஷ்டாக் அலி டிராபி - இறுதியில் தமிழகம்-கர்நாடகம் மோதல்

Published On 2021-11-20 20:20 GMT   |   Update On 2021-11-20 20:20 GMT
சையத் முஷ்டாக் அலி டிராபியில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடகாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோகன் கதம் 56 பந்தில் 87 ரன்கள் எடுத்து அசத்தினார்.
புதுடெல்லி:

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதிச் சுற்றுக்கு தமிழ்நாடு, ஐதராபாத், விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள்  தகுதிபெற்றன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் தமிழ்நாடு, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 90 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

தமிழக அணி சார்பில் சரவணன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முருகன் அஷ்வின், முகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் 34 ரன், விஜய் சங்கர் 43 ரன் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தனர். இதன்மூலம் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இதேபோல், விதர்பா, கர்நாடகம் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதியில் கர்நாடகம் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News