செய்திகள்
கோப்புப்படம்

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 5,427 பேருக்கு கொரோனா - 38 பேர் பலி

Published On 2021-02-18 18:13 GMT   |   Update On 2021-02-18 18:13 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 5,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,427 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20,81,520 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2,543 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,87,804  ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழக்க, இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 51,669 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 40,858  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News