ஆன்மிகம்
அய்யனார்

பூதலூர் கோட்டைமேடு அய்யனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2021-08-17 06:16 GMT   |   Update On 2021-08-17 06:16 GMT
பூதலூர் கோட்டைமேடு அய்யனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி அய்யனாருக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பூதலூர் கோட்டைமேடு பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அய்யனாருக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News