செய்திகள்
கோவை உக்கடத்தில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் 13 பவுன் நகை அபேஸ்
கோவை உக்கடத்தில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் 13 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி நாகவள்ளி (வயது 28). நாகவள்ளியின் தாய் நாகமணி கோவை குனியமுத்தூரில் வசித்து வருகிறார்.
துப்புரவு தொழிலாளியான இவர் புதிய வீடு கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிக்காக பணம் தேவைப்பட்டது. போதி பணம் இல்லாததால் மகளிடம் உதவி கேட்டார். அவர் தன்னிடம் இருந்த 12¾ பவுன் நகையை ஒரு பையில் போட்டு நேற்று கோவைக்கு புறப்பட்டார். கோவை உக்கடம் வந்தபோது நகை மாயமானது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த நாகவள்ளி இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்த நபர்களை தேடி வருகிறார்கள்.