செய்திகள்
ஈரோட்டில் தூக்குபோட்டு திருநங்கை தற்கொலை
ஈரோட்டில் மின்கம்பத்தில் திருநங்கை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு
ஈரோடு கனிராவுத்தர் குளம் கூரை மேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவர் திருநங்கையாக மாறி தனது பெயரை மைதிலி என்கிற கணேசன் என மாற்றிக்கொண்டார். இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த மின்கம்பத்தில் மைதிலி என்கிற கணேசன் நேற்று முன்தினம் நள்ளிரவில் தூக்குபோட்டுக் கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மைதிலி என்கிற கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மைதிலி என்கிற கணேசனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.