வழிபாடு
வெயிலுகந்தம்மன் கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வெயிலுகந்தம்மன் கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-01-27 07:17 GMT   |   Update On 2022-01-27 07:17 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உபகோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு மாசித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. காலை 6.45 மணிக்கு மேளதாளங்கள் முழங்க முத்துராமன் வல்லவராயர் மாசித்திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரம் தர்ப்பைப்புல், வண்ண மலர்கள் மற்றும் பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு கொடி மரத்திற்கு மகா தீபாராதனை நடந்தது.

நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் பணியாளர்கள் பிச்சையா, மணியம் பாஸ்கர், நாகராஜன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளின் படி தினசரி அம்மன் உலா கோவில் உள்பிரகாரத்தில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News