செய்திகள்
சிறை தண்டனை

ரூ.41 லட்சம் மோசடி- நிதி நிறுவன உரிமையாளர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

Published On 2020-10-15 09:13 GMT   |   Update On 2020-10-15 09:13 GMT
ரூ.41 லட்சம் மோசடி புகாரில் நிதி நிறுவன உரிமையாளர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
கோவை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2012-ம் ஆண்டு ஜோதி என்ற பெயரில் குணசேகரன் (வயது 45), அய்யாவு (40) ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அவர்கள், பொதுமக்கள் செய்யும் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறினர். அதை நம்பி பலர் பணம் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி அதிக வட்டி தரவில்லை.

இது குறித்து ஈரோடு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசில் முதலீட்டாளர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 16 பேரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே நிதி நிறுவன உரிமையாளர்கள் குணசேகரன், அய்யாவு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குணசேகரன், அய்யாவு ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ரவி நேற்று தீர்ப்பு கூறினார்.
Tags:    

Similar News