ஆன்மிகம்
இயேசு

தவக்கால சிந்தனை: சாட்டை பின்னும் காலம்

Published On 2021-03-04 08:49 GMT   |   Update On 2021-03-04 08:49 GMT
யோவான் 2:13-35 இயேசு தன் வாழ்வில் கடினமாக நடந்து கொண்ட நேரங்களில் இந்தப்பகுதியும் ஒன்று.இயேசு அப்படி என்ன கடினமாக நடந்துகொள்கிறார்? என்று அறிந்து கொள்ளலாம்
யோவான் 2:13-35 இயேசு தன் வாழ்வில் கடினமாக நடந்து கொண்ட நேரங்களில் இந்தப்பகுதியும் ஒன்று.இயேசு அப்படி என்ன கடினமாக நடந்துகொள்கிறார்?இயேசு கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி கோவிலில் அமர்ந்து புறா விற்பவர்களையும், நாணயம் மாற்றுவோரையும் அடித்து வெளியேற்றுக்கின்றார்.இதில் நாம் கூர்ந்து நோக்க வேண்டியது என்னவெனில்.இயேசு தானே தன் கைகளால் ஒரு சாட்டை பின்னுவதாக நற்செய்தி நமக்கு கூறுகிறது. அத்தோடு நில்லாமல் அந்த சாட்டையைகொண்டு கடவுளுக்கு ஒவ்வாத செயல்களை செய்பவர்களை அடித்து துரத்துகிறார்.

இயேசு கடினமான சொற்களை பயன்படுத்தி வியாபாரிகளை கோவிலை விட்டு வெளியேற்றி இருக்கலாம் அல்லது அன்பாக எடுத்துக்கூறி அறிவுரை சொல்லி கோவிலை விட்டு வெளியேற்றி இருக்கலாம்.இப்படி எல்லாம் செய்ய முடியாமல் கடினமான முறையை ஆண்டவர் இயேசு பயன்படுத்துகிறார். இயேசுவின் இந்த செயலில் இருந்து தவக்காலத்திற்கான பாடத்தை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். சாட்டை அடக்கும் கருவிகளுள் ஒன்று. தறிகெட்டு ஓடும் கட்டுக்கு அடங்காத குதிரைகளையும்,காளைகளையும் அடக்க பண்படுத்தும் கடினமான கருவியாகும்.

இதேபோல ஒரு சாட்டையைத்தான் ஆண்டவர் இயேசு இந்த தவக்காலத்தில் நம்மை பின்னச்சொல்கிறார். எதற்காக?தறிகெட்டு ஓடும் நம் மன குதிரையை இந்த சாட்டையை கொண்டு அடக்குவதற்காக,நீண்ட நாட்களாக உள்ளத்தில் குடியிருந்து உள்ளம் என்னும் கோவிலின் புனிதத்தை கெடுத்து. நம்மை வாட்டி வதைக்கும் பாவ செயல்களை இந்த சாட்டையைக்கொண்டு விரட்ட வேண்டும். உதாரணமாக கோபம் என்னும் பாவத்தை எடுத்துக்கொள்வோம்.இது நம் உள்ள ஆலயத்தில் தூய்மையை கெடுக்கின்ற ஒரு பாவம். இந்த பாவத்தை எந்த சாட்டை கொண்டு விரட்டுவது?பொறுமை என்னும் சாட்டையைக்கொண்டு கோபம் என்னும் பாவத்தை அடித்து விரட்டுவோம். பொறுமை என்னும் சாட்டையை பின்ன என்னென்ன கயிறுகள் நமக்குத்தேவை?

1)நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து தியானம் செய்யும் கயிறு.2)ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது மவுனமாக இருத்தல் என்னும் கயிறு.3) பிறரின் சொல்லுக்கு கவனம் என்னும் கயிறு.4)தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்தல் என்னும் கயிறு.5) கோபம் வரும்போது அந்த இடத்தை விட்டு அகலுதல் என்னும் கயிறு.இந்த கயிறுகளை கொண்டு பொறுமை என்னும் சாட்டையை நாம் பின்னிவிட முடியும்.பிறகென்ன?கோபம் என்னும் மனக்குதிரை தானாக அடங்கி பொறுமை என்னும் வளையத்திற்குள் வந்துவிடுவோம்.

இதுபோன்று ஒவ்வொறு பாவத்திற்கும் ஒவ்வொரு சாட்டையை பின்னுவோம். இந்த தவக்காலத்தில் நம் மனதை மிகவும் வருத்தும் ஏதாவது ஒரு பாவத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை விரட்ட என்னென்ன கயிறுகள் கொண்டு சாட்டை பின்னலாம் எனயோசிப்போம். ஏனெனில் தவக்காலம் பாவத்திற்கு எதிராக சாட்டை பின்னும் காலமாகும். ஆமென்.

போதகர் லூயிஸ், அந்தியூர்.
Tags:    

Similar News