ஆன்மிகம்
கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய சப்பர பவனி

கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய சப்பர பவனி

Published On 2020-10-14 07:41 GMT   |   Update On 2020-10-14 07:41 GMT
திசையன்விளை அருகே உள்ள கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திசையன்விளை அருகே உள்ள கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 10-ம் திருவிழா அன்று காலை ஆடம்பர கூட்டு திருப்பலியை சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு ரவி பாலன் நடத்தினார்.

தொடர்ந்து குழந்தைகளுக்கு முதல் திருவிருந்து மற்றும் சப்பர பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை விக்டர் சாலமோன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News