செய்திகள்
’மோடியல்ல யாரைபார்த்தும் எனக்கு பயமில்லை... அவர்களால் என்னை சுடமுடியும்... தொடமுடியாது’ - ராகுல்காந்தி
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் 55-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
இந்த பிரதியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டார். அதன் பின் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. போராடும் விவசாயிகளுக்கு நான் 100 சதவிகிதம் ஆதரவு தருகிறேன். நமக்காக போராடும் விவசாயிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
* விவசாயிகளுக்கு உண்மை நிலை தெரியும். ராகுல்காந்தி என்ன செய்வார் என்பது விவசாயிகளுக்கு தெரியும். எனக்கு ஒரு குணம் உள்ளது. நரேந்திரமோடி மட்டுமல்ல யாரைப்பார்த்தும் எனக்கு பயமில்லை.
* அவர்களால் என்னை சுட முடியும். ஆனால் என்னை தொட முடியாது
* நான் தேசப்பற்றுமிக்கவன். எனது நாட்டை நான் பாதுகாப்பேன். அவர்களை (பாஜக) விட நான் தேசப்பற்றுமிக்கவன்.
என்றார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் 55-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய பதிப்பு பிரதியை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.
* புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. போராடும் விவசாயிகளுக்கு நான் 100 சதவிகிதம் ஆதரவு தருகிறேன். நமக்காக போராடும் விவசாயிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
* விவசாயிகளுக்கு உண்மை நிலை தெரியும். ராகுல்காந்தி என்ன செய்வார் என்பது விவசாயிகளுக்கு தெரியும். எனக்கு ஒரு குணம் உள்ளது. நரேந்திரமோடி மட்டுமல்ல யாரைப்பார்த்தும் எனக்கு பயமில்லை.
* அவர்களால் என்னை சுட முடியும். ஆனால் என்னை தொட முடியாது
* நான் தேசப்பற்றுமிக்கவன். எனது நாட்டை நான் பாதுகாப்பேன். அவர்களை (பாஜக) விட நான் தேசப்பற்றுமிக்கவன்.
என்றார்.