உள்ளூர் செய்திகள்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அபுபக்கர் வழங்கினார்.

நலிந்த இஸ்லாமியர்களுக்கு நிவாரண பொருட்கள்

Published On 2022-04-15 10:25 GMT   |   Update On 2022-04-15 10:25 GMT
கும்பகோணத்தில் நலிந்த இஸ்லாமியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கும்பகோணம்:

கும்பகோணத்தில் நலிந்த இஸ்லாமியர்களுக்கு ரமலான் பெருவிழாவை முன்னிட்டு நிவாரண பொருட்களை ஹஜ் கமிட்டி அசோசியேசன் தலைவர் அபுபக்கர் வழங்கி பேசும்போது,

தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் சென்னையில் இருந்து நேரடியாக புனிதப் பயணம் மேற்கொள்ள விமான சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த வாரம் அதற்கான உரிய அனுமதி கிடைத்துவிடும். கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். 

வருகிற 22ஆம் தேதி வரை ஹஜ் பயணம் செய்ய விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார். முன்னதாக இஸ்லாமிய சமூகத்திற்கு பயன்படும் வகையில் கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலுக்கு

கார் ஒன்றினை நன்கொடையாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.பி., ஜமாத் தலைவர் அபுபக்கர், செயலாளர் ஹாஜி, தொழிலதிபர் சாதிக்பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News