செய்திகள்
புதுச்சேரி

புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாள் பொங்கல் விடுமுறை- கல்வித்துறை அறிவிப்பு

Published On 2020-01-11 07:12 GMT   |   Update On 2020-01-11 07:12 GMT
தமிழகத்தை பின்பற்றி புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாள் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழத்தில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

இதேபோல், புதுவையிலும் திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன் பேரில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13-ந் தேதி திங்கட்கிழமை புதுவை மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் (பிப்ரவரி) மாதம் 8-ந் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனால் புதுவையிலும் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை பள்ளிகள் இயங்காது.

Tags:    

Similar News