செய்திகள்
ஜி.கே.வாசன்

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி- ஜி.கே.வாசன் பேட்டி

Published On 2021-09-15 19:56 GMT   |   Update On 2021-09-15 19:56 GMT
தமிழக அரசை பொறுத்தவரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டும்.
மதுரை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடநாடு கொலை வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில், தமிழக அரசு பழிவாங்கும் போக்கில் செயல்படுவதாக தெரிகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே அரசு செயல்பட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்கக்கூடாது. கல்வியில் அரசியலை புகுத்தியதால் தற்போது துரதிருஷ்டவசமான சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசை பொறுத்தவரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்டுப்பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News