செய்திகள்
குசுமா,சித்தராமையா

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் குசுமா போட்டியிடுவார்: சித்தராமையா

Published On 2020-10-07 02:07 GMT   |   Update On 2020-10-07 02:07 GMT
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் மறைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி குசுமா காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.
மைசூரு :

கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா நேற்று மைசூருவுக்கு வந்தார். மைசூருவில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் மறைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி குசுமா காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். இதுதொடர்பாக கட்சி மேலிடத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. மேலும் கட்சி மேலிடத்திற்கு வேட்பாளராக அவரது பெயர் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கட்சி மேலிடமும் அனுமதி அளித்துவிட்டது. அதனால் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் குசுமா காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News