ஆன்மிகம்
சிவன் நந்தி

வெள்ளிக்கிழமை பிரதோஷமும்... விரத வழிபாட்டு பலனும்...

Published On 2021-02-25 07:58 GMT   |   Update On 2021-02-25 07:58 GMT
சுக்ரனின் ஆதிக்கம் நிறைந்தது, வெள்ளிக்கிழமை. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு.

சுக்ரனின் ஆதிக்கம் நிறைந்தது, வெள்ளிக்கிழமை. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சுக்ர தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். ஆண்களின் ஜாதகத்தில் சுக்ரன் நீச்சம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்றதால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும்.

கணவன் - மனைவி ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் சுபீட்சம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். மேலும் சுப பலன்கள் அதிகமாக, வில்வ இலைகளாலும் , வாசனை மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
Tags:    

Similar News