செய்திகள்
கைது

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2020-02-15 06:38 GMT   |   Update On 2020-02-15 06:38 GMT
நெல்லையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை பேட்டையில் உள்ள கக்கன்ஜி நகரை சேர்ந்த முருகன் மகன் வல்லாளகண்டன் (வயது 25). இவர் கங்கைகொண்டான் அருகே உள்ள தனியார் டயர் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவரது வீட்டருகே உள்ள மாணவி வீட்டுக்கு நெல்லை பேட்டையை சேர்ந்த 16 வயதுள்ள 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது வல்லாளகண்டன் அந்த மாணவியிடம் பேசி பழகி உள்ளார். மேலும் அந்த மாணவிக்கு புது செல்போன் வாங்கி கொடுத்து அதன்மூலம் அந்த வாலிபர் பேசி பழகி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மாணவியை காணாத அவரது பெற்றோர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வல்லாளகண்டன் மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News