செய்திகள்
கோப்புபடம்

ஆம்பூர் அருகே காவலாளி கொலையில் மனைவியிடம் போலீசார் விசாரணை

Published On 2021-04-08 14:10 GMT   |   Update On 2021-04-08 14:10 GMT
ஆம்பூர் அருகே முகம் சிதைந்து காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கென்னடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மகளுக்கு திருமணமாகி அவர் குடியாத்தம் அடுத்த ராமாலை தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்து சில ஆண்டுகளாக கோவிந்தராஜ் அவரது மனைவி கல்யாணியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். கல்யாணி, தனது மகள் வசிக்கும் குடியாத்தம் அடுத்த ராமாலை தண்ணீர் பந்தல் பகுதியில் டிபன் கடை வைத்து அங்கேயே தங்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜ் தண்ணீர்பந்தல் பகுதிக்குச் சென்று மனைவியுடன் தங்கியுள்ளார். இந்நிலையில் கல்யாணி மூன்று நாட்களுக்கு முன்பு தனது உறவினர்களுக்கு போன் செய்து தனது கணவர் கோவிந்தராஜ் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்து விட்டார் என தகவல் தெரிவித்துவிட்டு அவரது உடலை கணவரின் ஊரான கென்னடி குப்பம் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு இறுதிச் சடங்கு செய்யும் போது கோவிந்தராஜ் உடலில் பல இடங்களில் காயமும், கைகள் கட்டப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் இருந்துள்ளது.சந்தேகமடைந்த உறவினர்கள் இறுதி சடங்கு செய்யாமல் ஆம்பூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்த ஆம்பூர் போலீசார், கோவிந்தராஜ் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் கோவிந்தராஜ் உடலில் காயங்கள் இருப்பதை தொடர்ந்து ஆம்பூர் போலீசார் பரதராமி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் (பொறுப்பு), பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

நேற்று கோவிந்தராஜ் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர், இதனிடையே பரதராமி போலீசில் கோவிந்தராஜ் அக்கா தங்கம்மாள் என்பவர் தனது தம்பியை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார்.

அதன் மீது பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ்மனைவி கல்யாணி மற்றும் சிலரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News