உள்ளூர் செய்திகள்
தேவர்குளம் அருகே காற்றாலையில் திருடிய 2 பேர் கைது
நெல்லை அருகே காற்றாலையில் பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தேவர்குளம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது காற்றாலை உள்ள பகுதிகளுக்கு 2 பேர் சந்தேகப்படும்படி மூட்டைகளுடன் வந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் காற்றாலை நிறுவனத்தில் இருந்து காப்பர் வயர் மற்றும் இரும்பு பொருட்கள் திருடி வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக காற்றாலை நிர்வாகத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். காற்றாலை நிறுவன மேலாளர் மூவிருந்தாளியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 47) என்பவர் இதுகுறித்து புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார், திருட்டில் ஈடுபட்ட தேவர்குளத்தை சேர்ந்த டேனிகுமார் (27), விளாத்திகுளத்தை சேர்ந்த ஜோசப் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லையை அடுத்த தேவர்குளம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது காற்றாலை உள்ள பகுதிகளுக்கு 2 பேர் சந்தேகப்படும்படி மூட்டைகளுடன் வந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் காற்றாலை நிறுவனத்தில் இருந்து காப்பர் வயர் மற்றும் இரும்பு பொருட்கள் திருடி வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக காற்றாலை நிர்வாகத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். காற்றாலை நிறுவன மேலாளர் மூவிருந்தாளியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 47) என்பவர் இதுகுறித்து புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார், திருட்டில் ஈடுபட்ட தேவர்குளத்தை சேர்ந்த டேனிகுமார் (27), விளாத்திகுளத்தை சேர்ந்த ஜோசப் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.