ஆன்மிகம்
திருவண்ணாமலையில் 13-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து 13-வது மாதமாக இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதி முதல் கொரோனா ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 28-ந்தேதி அதிகாலை 3.22 மணிக்கு தொடங்கி 29-ந்தேதி அதிகாலை 1.29 மணிக்கு நிறைவடைகிறது.
இதற்கிடையில் தொடர்ந்து 13-வது மாதமாக இந்த மாதமும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
எனவே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அண்ணாமலையார் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
மேலும் பவுர்ணமி நாளில் தடை உத்தரவை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
இந்நிலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 28-ந்தேதி அதிகாலை 3.22 மணிக்கு தொடங்கி 29-ந்தேதி அதிகாலை 1.29 மணிக்கு நிறைவடைகிறது.
இதற்கிடையில் தொடர்ந்து 13-வது மாதமாக இந்த மாதமும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
எனவே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அண்ணாமலையார் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
மேலும் பவுர்ணமி நாளில் தடை உத்தரவை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.