உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

Published On 2022-04-17 08:52 GMT   |   Update On 2022-04-17 08:52 GMT
குளித்தலை அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது
கரூர்

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்கிற பாலமுருகன். இவர் முசிறியில் உள்ள அவரது நண்பரை சந்தித்துவிட்டு காரில் நேற்று திருச்சியை நோக்கிய  திரும்பியுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள நாப்பாளையம் அருகே சென்றுக்கொண்டிருந்த  போது காரின் இன்ஜினியிலிருந்து திடீரென புகை வந்தது.

அதனை தொடர்ந்து கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலமுருகன் உடனடியான காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து இறங்கி உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் முசிறி தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்பட்டது
Tags:    

Similar News