லைஃப்ஸ்டைல்
நெஞ்சு சளியை விரட்டும் சிகிச்சை

நெஞ்சு சளியை விரட்டும் சிகிச்சை

Published On 2021-04-09 07:40 GMT   |   Update On 2021-04-09 07:40 GMT
நெஞ்சு சளியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதனை எளிதில் சரி செய்து விடலாம். நாள்பட்ட நெஞ்சு சளியை, நுரையீரல் ஊடு சோதிப்பு முறையில் சரி செய்து விட முடியும்.
கொரோனா காலகட்டத்தில் சளியின் பாதிப்பை உணராதவர்கள் இருக்க முடியாது. சாதாரணமாக சளி பிடித்தால் அது ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகி விடும். ஆனால் இருமலுடன் சேர்ந்து வெளியேறும் சளியின் நிறம் அடர்ந்த மஞ்சள் அல்லது வெளிர் பச்சையாக வரும்போது நெஞ்சு சளி அதிகம் இருப்பதை நாம் உணரலாம்.

நெஞ்சு சளியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதனை எளிதில் சரி செய்து விடலாம். நாள்பட்ட நெஞ்சு சளியை, நுரையீரல் ஊடு சோதிப்பு முறையில் சரி செய்து விட முடியும். இதற்கு நாம் உரிய நுரையீரல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

சுவாசிப்பதில் பிரச்சினை இருந்தால் சுவாசப் பாதையின் உட்பகுதி பிரான்கோஸ்கோபி மூலம் பரிசோதிக்கப்பட்டு காரணம் கண்டறியப்படும். சாதாரண திசுவை போன்று உறைந்த சளியை இந்த சிகிச்சையின் மூலம் அகற்றி விட முடியும். அவ்வாறு அகற்றப்படும் சளியை ஸ்கோப் வழியாக சேகரித்து நுண்ணிய பரிசோதனைக்கு அனுப்பி நோய்த்தொற்றை உறுதி செய்த பின்னர் உரிய சிகிச்சை மேற்கொள்ளும் போது சளி மேலும் உற்பத்தியாகாமல் முற்றிலுமாக தடுக்க முடியும்.

சிகிச்சை முடிவின் அடிப்படையில் நுரையீரல் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மூலம் பாதிப்பை முற்றிலுமாக சரி செய்யலாம். எனவே சாதாரண சளியாக இருக்கும் பட்சத்தில் ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகிவிடும். அது தொடரும் பட்சத்தில் அதை நெஞ்சு சளியாக மாறி விடாமல் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்து விடுவது பல்வேறு நுரையீரல் பாதிப்புகளை தவிர்க்கும்.

டாக்டர் நர்த்தனன், முதன்மை நுரையீரல் மருத்துவர்.

Tags:    

Similar News