செய்திகள்
ஷாருக்கான்

கொல்கத்தா - ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியை நேரில் சென்று பார்த்து ரசித்த ஷாருக்கான்

Published On 2020-09-30 17:08 GMT   |   Update On 2020-09-30 17:08 GMT
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தை பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நேரில் சென்று கண்டு ரசித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஷாருக் கான். ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது கொல்கத்தா விளையாடும் போட்டிகளை நேரில் சென்று கண்டு ரசிப்பது வழக்கம். அப்போது ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களுடன் அணி உரிமையாளர்களும் சென்றுள்ளனர்.

அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர். முக்கியமான நபர்கள் ஒவ்வொருவராக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஷாருக்கான் இன்றைய போட்டியை பார்ப்பதற்கான மைதானத்திற்கு வந்திருந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். ஷாருக் கானுடன் அவருடைய மகனும் வந்திருந்தார்.
Tags:    

Similar News