செய்திகள்
கோப்புபடம்

கடையநல்லூரில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2021-09-24 12:59 GMT   |   Update On 2021-09-24 12:59 GMT
கடையநல்லூரில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:

மேல கடையநல்லூர் பவுண்டு கீழமேல் தெருவைச் சேர்ந்தவர் மருதையா. இவருடைய மனைவி பத்மாவதி. இவர் கடையநல்லூர் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகள் கல்பனா சூர்யா (வயது 13), அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் தங்களது வீட்டில் டி.வி. பார்ப்பதற்காக டி.டி.எச். ரீசார்ஜ் செய்யுமாறு தாயாரிடம் கூறினார். இதற்கு பத்மாவதி மறுத்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தாயார் வேலைக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கல்பனா சூர்யா மாலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த பத்மாவதி தனது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று, கல்பனா சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News