ஆன்மிகம்
பெரியநாயகி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா தொடங்கியது
கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோணான்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா மற்றும் ஆலயம் கட்டிய 300-வது ஆண்டு தொடக்க விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் வேலூர் மறைமாவட்ட ஆயர் சவுந்தரராஜு பெரியநாயகம், புதுச்சேரி- கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். முன்னதாக அன்று மாலை 5 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகிற 23-ந் தேதி இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 7.30 மணிக்கு கூட்டு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெறும். 24-ந் தேதி கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தேவ சகாயராஜ், உதவி பங்குதந்தை அலெக்ஸ் ஒளில் குமார் மற்றும் வட்டார குருக்கள், அருட்சகோதரிகள், காரியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.
இதில் வேலூர் மறைமாவட்ட ஆயர் சவுந்தரராஜு பெரியநாயகம், புதுச்சேரி- கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். முன்னதாக அன்று மாலை 5 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகிற 23-ந் தேதி இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 7.30 மணிக்கு கூட்டு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெறும். 24-ந் தேதி கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தேவ சகாயராஜ், உதவி பங்குதந்தை அலெக்ஸ் ஒளில் குமார் மற்றும் வட்டார குருக்கள், அருட்சகோதரிகள், காரியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.