செய்திகள்
விஜய் - திருச்சி சிவா

நடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் - திருச்சி சிவா

Published On 2019-09-20 18:20 GMT   |   Update On 2019-09-20 18:20 GMT
பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
திருவாரூர்:

திருவாரூரில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமே இணைப்பு மொழியாக வர முடியுமே தவிர, இந்தியாவில் உள்ள எந்த மொழியும் பொதுமொழியாக வர முடியாது. இந்தி மொழிக்கு சொந்தமாக எழுத்து வடிவம் கூட கிடையாது.  நடிகர் விஜய் அவர் விருப்பப்பட்டதையும், பேசத்தோன்றியதையும் கூறியுள்ளார் என அவர் தெரிவித்தார்.

‘பிகில்’இசை வெளியீட்டு விழாவில்,  "யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும்" எனவும் "அரசியலில் புகுந்து விளையாடுங்க; ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க" எனவும் தெரிவித்தார். இவ்வாறு  நடிகர் விஜய் பேசிய பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
Tags:    

Similar News