செய்திகள்
தற்கொலை

அரக்கோணத்தில் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை

Published On 2021-01-12 12:43 GMT   |   Update On 2021-01-12 12:43 GMT
அரக்கோணத்தில் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் கிரிசிங் நகரை சேர்ந்தவர் விக்னேஷ், என்ஜினீயர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி எழிலரசி (வயது 26). உறவினர்களான இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மந்தத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். சம்பவத்தன்று விக்னேஷ், எழிலரசிக்கிடையே உணவு சமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் விக்னேஷ், ஓட்டலில் உணவு வாங்கி வருவதாக எழிலரசியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஓட்டலில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது எழிலரசி படுக்கை அறையில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி ஆறு மாதங்களே ஆவதால் அது குறித்து அரக்கோணம் உதவி கலெக்டர் பேபி இந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News