செய்திகள்
கொள்ளை நடந்த வீடு.

பனியன் தொழிலாளி வீட்டில் கொள்ளை

Published On 2021-08-15 08:57 GMT   |   Update On 2021-08-15 08:57 GMT
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவா தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு சென்றார். இன்று காலை ஊரில் இருந்து வீட்டிற்கு வந்தார்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் கற்பகம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 41) பனியன் தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு சென்றார். இன்று காலை ஊரில் இருந்து  வீட்டிற்கு வந்தார்.
 
வீட்டிற்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த சிவா உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில்  இருந்த நகை-பணம் கொள்ளை போயிருந்தது. இதையடுத்து சிவா பல்லடம் போலீசில் புகார் அளித்தார். 

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கைவரிசையில்  ஈடுபட்டுள்ளனர். கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை.  

கொள்ளையர்கள் யாரென்று கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News