செய்திகள்
பலி

நெகமம் அருகே வாய்க்காலில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

Published On 2021-04-16 09:32 GMT   |   Update On 2021-04-16 09:32 GMT
நெகமம் அருகே வாய்க்காலில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

பழனி அருகே உள்ள கெம்பலாம்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் வினோத்குமார் (21). கூலித் தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் நெகமம் அருகே உள்ள அவலாம்பட்டி பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். அங்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் நெகமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வாய்க்காலில் இருந்து வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ரேணுகா தேவி (வயது 27). சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ரேணுகா தேவி மிகுந்த வேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ரேணுகா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள்ளாச்சி அருகே உள்ள அவலாம்பபட்டியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ் (55). விவசாயி. மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

இதனால் கடந்த 20 வருடத்துக்கு முன்பு சவுந்தர்ராஜின் மனைவி பிரிந்து சென்றார். எனவே கடந்த 20 வருடங்களாக அவர் தனியாக வசித்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த சவுந்தர்ராஜ் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று சவுந்தர்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பூவாண்டி (27). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பூவாண்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

Similar News