செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி
அரசு பள்ளி மாணவர்கள் பேச்சு, கட்டுரை, ஓவியம் என பல பிரிவுகளாக போட்டிகளில் பங்கேற்றனர்.
திருப்பூர்:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு போட்டிகள் இணையவழியில் கடந்த ஜனவரி, பிப்ரவரி - மாதங்களில் நடத்தப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்கள் பேச்சு, கட்டுரை, ஓவியம் என பல பிரிவுகளாக போட்டிகளில் பங்கேற்றனர்.இதில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது.
மாவட்ட அளவில் 150 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் சான்றிதழ்களை வழங்கினார்.
மாணவர் ‘புத்தாக்கம்‘ பெறும் வகையில் புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது.பள்ளிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சின்னங்கள் அடங்கிய பதாகைகள், 150 பள்ளிகளுக்கு மாணவர்கள் அணியும், ஒளி மிளிரும் உடைகளும் வழங்கப்பட்டன.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.