ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2021-02-17 08:49 GMT   |   Update On 2021-02-17 08:49 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத சப்தமி நடைபெற இருப்பதை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ரத சப்தமி, பவித்ரோற்சவம், வசந்தோற்சவம், வருடாந்திர பிரம்மோற்சவம் என ஆண்டுக்கு 4 முறை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத சப்தமி நடைபெற இருப்பதை முன்னிட்டு நேற்று காலை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.

அதன் ஒரு பகுதியாக கோவில் சுவர்கள், மேற்கூரை, தரிசன பாதை, உயர்மேடைகள், பூஜை பொருள்கள், கருவறை விமானம், கதவுகள் உள்ளிட்ட அனைத்தும் ஸ்ரீசூரணம், நாமகட்டி, கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், குங்குமம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி உள்ளிட்ட பொருள்களால் சுகந்த திரவிய கலவை செய்து, அதனை ஊழியர்கள் அனைத்து இடங்களிலும் பூசி சுத்தம் செய்தனர்.

இதையொட்டி, காலை 6 மணிமுதல் 9 மணி வரை தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
Tags:    

Similar News