செய்திகள்
போலீசில் சிக்கிய இளைஞர்கள்

ரோட்டில் செல்லும் பெண்களை தொடர்ந்து சீண்டிய வாலிபர்கள்... சரியான பாடம் புகட்டிய போலீஸ்

Published On 2020-11-22 04:09 GMT   |   Update On 2020-11-22 04:09 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களை தொடர்ந்து தொந்தரவு செய்த வாலிபர்களுக்கு போலீசார் சரியான பாடம் புகட்டி உள்ளனர்.
தேவாஸ்:

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் சில இளைஞர்கள் பெண்களை தொடர்ந்து கேலி கிண்டல் செய்வதுடன், பாலியல் தொந்தரவும் செய்துவந்துள்ளனர். அந்த நபர்கள் எப்போதும் சாலையில் சுற்றித் திரிவதால் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வர மிகவும் அஞ்சினர். 

அந்த இளைஞர்களின் செயல் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 இளைஞர்களை கைது செய்தனர். அத்துடன் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு சரியான பாடம் புகட்டினர்.


சாலையின் நடுவில் தோப்புக் கரணம் போடச் செய்ததுடன், உரிய முறையில் கவனித்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 
Tags:    

Similar News