செய்திகள்
நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்தவர் பலி
நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:
நன்னிலம் அடுத்துள்ள கொல்லாபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்த அருள்தாஸ் (வயது 50). சம்பவத்தன்று கந்தன்குடியிலுள்ள கடைக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் பொழுது, கொல்லாபுரம் அருகே திடீரென்று மாடு குறுக்கே வர, நிலைதடுமாறிய அருள்தாஸ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, அருள்தாஸ் இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசர் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.