ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
பழனி முருகன் கோவிலில் மாசிமகத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் மாசிமகத்தையொட்டி உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் சங்குகளில் வைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது.
பின்னர் யாகபூஜையில் வைக்கப்பட்ட புனிதநீரால் உச்சிக்காலத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதன்பிறகு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் யாகபூஜையில் வைக்கப்பட்ட புனிதநீரால் உச்சிக்காலத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதன்பிறகு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.