செய்திகள்
கைது

துடியலூர் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி- 3 பேர் கைது

Published On 2021-10-19 17:42 GMT   |   Update On 2021-10-19 17:42 GMT
துடியலூர் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் சேராமுஷ்லியர் (வயது 40). பாத்திர கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்தார். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் தருமாறு கேட்டனர். சேராமுஷ்லியர் தன்னிடம் பணமில்லை என்றார். உடனே அந்த வாலிபர்கள் அவரின் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்தனர்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரிக் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் இதுகுறித்து சேராமுஷ்லியர் துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் அதே பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை திருப்பி அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தனர்.

இதைபார்த்த போலீசார் அவர்களை துரத்தி மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் ரத்தினபுரியை சேர்ந்த பிரவின் (24), கணபதியை சேர்ந்த ராஜேஷ் (24), கேரள மாநிலம் திருச்சுரை சேர்ந்த அஷ்வின் (32) என்பதும் இவர்கள் 3 பேரும் சேராமுஷ்லியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் மீது துடியலூர், செட்டிப்பாளையம், ரத்தினபுரி, சரவணம்பட்டி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும் இவர்கள் பழைய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் துடியலூர் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News