செய்திகள்

பரமக்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு 10-ம் வகுப்பு மாணவர் பலி

Published On 2017-12-02 04:19 GMT   |   Update On 2017-12-02 04:19 GMT
பரமக்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எமனேசுவரம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது மகன் பரத் குமார் (வயது 15). அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

திடீரென்று பரத்குமார் காய்ச்சலால் அவதிப்பட்டார். உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரத்குமார் பரிதாபமாக இறந்தார்.
Tags:    

Similar News