செய்திகள்
கலெக்டர் கோவிந்தராவ்

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை- கலெக்டர் பேட்டி

Published On 2021-04-17 10:29 GMT   |   Update On 2021-04-17 10:29 GMT
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.
வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வல்லம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த பஸ்சில் ஏறி, பயணிகள் முககவசம் அணிந்திருக்கிறார்களா? இருக்கையில் மட்டும் அமர்ந்து பயணம் செய்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். முககவசம் அணியாமல் யாராவது வெளியே வருகிறார்களா? என்பதை போலீசார், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. இன்றைக்கு கூட 10 ஆயிரம் டோஸ் வந்துள்ளது. இதுவரை 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து 50 இடங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தஞ்சை கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் பாலசுப்பிரமணியம், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், வருவாய் ஆய்வாளர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News