ஆட்டோமொபைல்
மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜூலை 1 ஆம் தேதி முதல் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை மோட்டார்சைக்கிள்கள் விலை ரூ. 3 ஆயிரம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.
விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். இருசக்கர வாகன உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதால் விலை உயர்த்தப்படுவதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து உள்ளது.
முன்னதாக மாருதி சுசுகி நிறுவனமும் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்தது. 2022 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தனது கார்கள் விலையை மாருதி சுசுகி உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் பயணிகள் வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்தன. வாகன உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தெரிவித்தன.