செய்திகள்
தற்கொலை

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை

Published On 2021-11-20 08:21 GMT   |   Update On 2021-11-20 08:21 GMT
அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி யுவராணி (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீதர் மேலமாத்தூரில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். யுவராணி பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீதர் பால் வாங்குவதற்காக வெளியே சென்றபோது, யுவராணி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார். பால் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து ஸ்ரீதர், அதைக்கண்டு உடனடியாக யுவராணியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் யுவராணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக யுவராணியின் தந்தை செல்லையா கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில வருடங்களாக யுவராணிக்கு கடுமையான வயிற்று வலி இருந்து வந்ததாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியடைந்த அவர், அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டதாகவும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News