உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

3 கிலோ கஞ்சாவைத்திருந்தவர் கைது செய்தனர்.

Published On 2022-04-16 10:33 GMT   |   Update On 2022-04-16 10:33 GMT
3 கிலோ கஞ்சாவைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி :

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இதையடுத்து அந்தவழியாக ரோந்து சென்ற பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் 3 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் இருப்பது தெரியவந்தது.

இதன் சந்தை மதிப்பு ரூ.33 ஆயிரம் ஆகும் . பின்னர் விசாரணையில் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் ஆசாத் தெரு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற துப்பாக்கி ரமேஷ் (வயது 52) என்பது தெரிய வந்தது அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News