ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நடந்த மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
3-ம் நாள் திருவிழாவான நேற்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதாவது தாய்-தந்தையர் வீட்டில் நடக்கும் விழாவை காண வந்த கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, குமாரகோவில் சுப்பிரமணியசாமி ஆகிய மூவரும் உமாமகேஸ்வரர், விஷ்ணு, அம்பாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் வாகனங்களை மூன்று முறை வலம் வந்து ஆசி பெற்றனர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.
பின்பு இருபுறமாக கிழக்கே பார்த்து அனைவரும் சேர்ந்து நின்று பக்த பெருமக்களுக்கு காட்சி கொடுத்து ஒரே நேரத்தில் ஒன்று போல் தீபாராதனைகளும் நடைபெற்றது.
இந்த காட்சி வருடத்தில் ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது. இந்த தரிசனத்தை மக்கள் மார் சந்திப்பு என்றும் மக்கள் மார்ச் சுற்று என்றும் கூறுவர். 7 நாட்கள் விநாயகரும், சுப்பிரமணியரும், தாய்-தந்தையர் திருத்தலத்தில் தங்கி அவர்களோடு விதவிதமான வாகனங்களில் வீதி உலா வருகின்ற அற்புத காட்சி எங்குமே காண கிடைக்காததாகும். இக்காட்சியை காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவார்கள்.
3-ம் நாள் திருவிழாவான நேற்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதாவது தாய்-தந்தையர் வீட்டில் நடக்கும் விழாவை காண வந்த கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, குமாரகோவில் சுப்பிரமணியசாமி ஆகிய மூவரும் உமாமகேஸ்வரர், விஷ்ணு, அம்பாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் வாகனங்களை மூன்று முறை வலம் வந்து ஆசி பெற்றனர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.
பின்பு இருபுறமாக கிழக்கே பார்த்து அனைவரும் சேர்ந்து நின்று பக்த பெருமக்களுக்கு காட்சி கொடுத்து ஒரே நேரத்தில் ஒன்று போல் தீபாராதனைகளும் நடைபெற்றது.
இந்த காட்சி வருடத்தில் ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது. இந்த தரிசனத்தை மக்கள் மார் சந்திப்பு என்றும் மக்கள் மார்ச் சுற்று என்றும் கூறுவர். 7 நாட்கள் விநாயகரும், சுப்பிரமணியரும், தாய்-தந்தையர் திருத்தலத்தில் தங்கி அவர்களோடு விதவிதமான வாகனங்களில் வீதி உலா வருகின்ற அற்புத காட்சி எங்குமே காண கிடைக்காததாகும். இக்காட்சியை காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவார்கள்.