உள்ளூர் செய்திகள்
கொலை

குன்றத்தூரில் மத்திய அரசு ஊழியர் குத்திக்கொலை

Published On 2022-01-16 02:49 GMT   |   Update On 2022-01-16 02:49 GMT
குன்றத்தூரில் மத்திய அரசு ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இறைச்சி வியாபாரி கைதானார்.
பூந்தமல்லி:

சென்னையை அடு்த்த குன்றத்தூர் சம்பந்தம் நகரைச் சேர்ந்தவர் பத்மகுரு (வயது 37). அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சிந்து (30). பத்மகுருவுக்கும், குன்றத்தூரை சேர்ந்த மீனா (29) என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருப்பதாக கூறி, பத்மகுருவின் மனைவி சிந்து நேற்று முன்தினம் இரவு மீனாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மீனா, அவருடைய கணவர் ரஜினி மற்றும் அவர்களது உறவினர்கள் பத்மகுருவின் வீட்டுக்கு சென்று இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பத்மகுரு, வீட்டில் இருந்த கத்தியால் மீனாவின் உறவினரான குமரன் (33), விஷ்வா (19) ஆகியோரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த குமரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த விஷ்வா, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த குன்றத்தூர் போலீசார், கொலையான குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான குமரன், ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் பிட்டராக வேலை செய்து வந்தார். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறைச்சி வியாபாரி பத்மகுருவை கைது செய்தனர்.
Tags:    

Similar News