செய்திகள்
மின்சார நிறுத்தம்

பெரியபாளையத்தில் 14-ந்தேதி மின்தடை

Published On 2021-09-11 12:08 GMT   |   Update On 2021-09-11 12:08 GMT
திருவள்ளூரை அடுத்த பெரியபாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பெரியபாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியபாளையம், பண்டிகாவனூர், பாலவாக்கம், தண்டலம், கன்னிகைபேர், வெங்கல், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News