ஆட்டோமொபைல்
இரு அப்ரிலியா மோட்டார்சைக்கிள்களுக்கான இந்திய முன்பதிவு துவக்கம்
இந்தியாவில் இரண்டு புதிய அப்ரிலியா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
அப்ரிலியா நிறுவனம் மிடில்-வெய்ட் மோட்டார்சைக்கிள் பிரிவில் இரண்டு புதிய மாடல்களை உருவாக்கி உள்ளது. அவை அப்ரிலியா ஆர்எஸ்660 மற்றும் டியோனா 660 ஆகும். இந்த இரண்டு மாடல்களும் அவற்றின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் காரணமாக சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவற்றின் கவர்ச்சிகர அம்சங்கள் பற்றிய ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. அப்ரிலியா நிறுவனம் ஆர்எஸ்660 மற்றும் டியோனா 660 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளது.
இந்த இரண்டு மாடல்கள் வெளியிடுவதற்கு முன், தற்சமயம் இவற்றுக்கான முன்பதிவு துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு மாடல்களும் இந்தியாவில் இரண்டாவது காலாண்டு வாக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது. சிபியு முறையில் கொண்டுவரப்பட இருப்பதால், இவற்றின் விலை அதிகமாகவே இருக்கும்.
அப்ரிலியா ஆர்எஸ்660 மற்றும் டியோனோ 660 ஆகிய இரு மாடல்களிலும் 660சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இரு மாடல்களும் வெவ்வேறு செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.