செய்திகள்
மம்தா பானர்ஜி

நந்திகிராம் தொகுதியில் 11-ம் தேதி மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்

Published On 2021-03-04 19:33 GMT   |   Update On 2021-03-04 19:33 GMT
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி சமீபத்தி ல் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என சவால் விடுத்தார். இதனை மம்தாவும் ஏற்று நந்திகிராமில் போட்டியிடுவேன் என அறிவித்தார்.

இந்நிலையில், வரும் 11-ம் தேதி மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News