செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் - எல்கே சுதீஷ்
பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் விஜயகாந்த் கை காட்டும் தொகுதியில் களம் இறங்குவேன் என்றும் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார். #DMDK #BJP #Vijayakanth
சென்னை:
தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். விஜயகாந்த் கை காட்டும் தொகுதியில் களம் இறங்குவேன்.
இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறினார்.
இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகி உள்ளது. #DMDK #BJP #Vijayakanth
தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் 2 வாரத்தில் அவர் சென்னை திரும்பியதும் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். விஜயகாந்த் கை காட்டும் தொகுதியில் களம் இறங்குவேன்.
இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறினார்.
இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகி உள்ளது. #DMDK #BJP #Vijayakanth