செய்திகள்
கைது

ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது

Published On 2021-11-23 09:58 GMT   |   Update On 2021-11-23 09:58 GMT
ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

ஊத்தங்கரை போலீசார் கல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வேலு (வயது 46), சிவன் (46), சுரேந்திரன் (31), ராமு (42), பார்த்திபன் (39), சலீம் (31), பசுபதி (38), செரீப் (32), பழனி (35), சிவம் (26), சுபாஷ் (37), ஜான்பாஷா (43) ஆகிய 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 ஆயிரத்து 570 மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News