செய்திகள்
பாஜக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 7-ந் தேதி பா.ஜ.க. விருப்பமனு பெறுகிறது

Published On 2021-11-03 21:08 GMT   |   Update On 2021-11-03 21:08 GMT
மாவட்ட தலைவர்கள் இதற்குரிய பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விருப்பமனுக்களை பெற வேண்டும்.
சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் 7-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விருப்பமனுக்கள் அளிக்கலாம். 7-ந் தேதி சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான மனுக்கள் வழங்கலை நான் தொடங்கிவைக்கிறேன். இதர மாநகராட்சிகளில் 10-ந் தேதி காலை முதல் மாநில நிர்வாகிகள் நேரில் சென்று விருப்பமனுக்களை பெற உள்ளார்கள். நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான விருப்பமனுக்கள் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பெறப்படும். விருப்பமனு பரிசீலனைக்கு பிறகு இறுதியாக வேட்பாளர் தேர்வு நடைபெற இருக்கிறது.

அந்தந்த மாவட்ட தலைவர்கள் இதற்குரிய பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விருப்பமனுக்களை பெற வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News