செய்திகள்
வெண்ணந்தூர் அருகே நீரில் மூழ்கி வாலிபர் பலி
வெண்ணந்தூர் அருகே நீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வெண்ணந்தூர்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதாசிவம் மகன் அஜித்குமார் (வயது 24). இவரும், இவருடைய நண்பரும் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே சுற்றுலா வந்தபோது அங்குள்ள பரவச உலகம் தீம் பார்க்கில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அஜித்குமார் நீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை மீட்டு மல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெண்ணந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.