செய்திகள்
மது விற்ற 2 பேர் கைது - 60 பாட்டில்கள் பறிமுதல்
பாலக்கோடு அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 60 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பாலக்கோடு:
மாரண்ட அள்ளி அருகே உள்ள கரகூர் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாரண்ட அள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் கரகூர் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் சரவணன் (வயது 47), செல்வகுமார் (31) ஆகியோர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வீட்டிற்கு பின்புறம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தலா 30 பாட்டில்கள் வீதம் 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.