செய்திகள்
மணல் கடத்தலுக்கு உதவிய போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
மணல் கடத்தலுக்கு உதவியதாக நெல்லை அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலைய ஏட்டு பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. கடத்தலுக்கு உடந்தையாக காவல்துறை அதிகாரிகள் யாரும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மணல் கடத்தலுக்கு உதவியதாக நெல்லை அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலைய ஏட்டு லட்சுமி நாராயணன் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.